• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விமான நிலையத்தில் வடக்கு இளைஞர்கள் இருவர் கைது

இலங்கை

ஐரோப்பாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற இருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ‘கிரேக்க’ சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் குறித்த சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கட்டாரின் டோஹாவுக்கு சென்று டோஹாவிலிருந்து, பாரிஸ{க்குச் சென்று இறுதியில் ஜேர்மனியின் மியூனிக் நகரை அடைவதற்கு திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், ஆவண பரிசோதனை நடவடிக்கைகளின்போது குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

Leave a Reply