• Welcome to TamilsGuide
செய்திகள் 1

19-வருட சிறைதண்டனை பெற்ற புதினின் எதிர்ப்பாளர் உயிரிழந்தார்

கடந்த 2022 பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2-வது வருடத்தை எட்ட உள்ள நிலையில், ஐ.நா. அமைப்புகளும், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் போரை நிறுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டது.

இரு நாடுகளிலும் பொருளாதாரம் பெரிதும் நலிவடைந்துள்ளதால் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முன்னெடுத்த சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு அந்நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் இது ஒரு முக்கிய அம்சமாக பொதுமக்கள் கருதலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் அதிபராக விரும்பும் புதின், தன்னை எதிர்க்கும் தலைவர்களை தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இப்பின்னணியில், ரஷிய அதிபரை விமர்சித்து வந்த அந்நாட்டின் பிரதான எதிர்கட்சி தலைவரான அலெக்சி நாவல்னி (Alexei Navalny), அரசுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, 19-வருட கால சிறை தண்டனை அளிக்கப்பட்டு, ரஷிய சிறைச்சாலைகளிலேயே மிகவும் மோசமானதாக கருதப்படும் ஆர்க்டிக் பீனல் காலனி (Arctic penal colony) சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், யமலோ-நெனெட்ஸ் மாவட்ட (Yamalo-Nenets) சிறைத்துறை, தற்போது 47 வயதாகும் அலெக்சி நாவல்னி, சிறையில் மயக்கமடைந்ததாகவும், அவசர மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அவரை காப்பாற்ற போராடியும், சிகிச்சை பலனின்றி அலெக்சி உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

அலெக்சி நாவல்னியின் உயிரிழப்புக்கான காரணம் தற்போது வரை சரிவர தெரியவில்லை.

நாவல்னியின் வழக்கறிஞர் லியோனிட் சோலோவ்யோவ் இத்தகவல் குறித்து விளக்கமளிக்க மறுத்து விட்டார்.
 

Leave a Reply