யாழில் பாலை,முதிரைக் குற்றிகளைப் பதுக்கி வைத்திருந்த இருவர் கைது
இலங்கை
யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் பாலை மற்றும் முதிரைகுற்றிகளை சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்த குற்றச்சாட்டில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெட்டப்பட்டு முத்திரை மற்றும் பாலை மர தீராந்திகள் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு கொண்டுவரபட்டதாக வனவள பாதுகாப்பு திணைக்களத்திற்கு புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய குறித்த திணைக்களத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதன் பொழுது 30 முதிரை மரகுற்றிகள் மற்றும் 33 பாலை மர தீராந்திகளுடனும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யபட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.