• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் உள்ளூர் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தவர் கைது

இலங்கை

கிளிநொச்சி,கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில்  உள்ளூர் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்த குற்றச் சாட்டில் நபரொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது குறித்த நபரிடமிருந்து 3 மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும் கட்டுத் துவக்குக் குழாய்கள், 12 ஈயக்குண்டுகள் , 3 யானை வெடிமருந்துகளையும் பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் நேற்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் உள்ளூர் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தவர் கைது

Leave a Reply