• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னாரில் சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை

இலங்கை

தலைமன்னாரில் 10 வயதான சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்த நிலையில், அதே பகுதியில் தனது குடும்பத்தைப்  பிரிந்து தனியாக வசித்து வந்த போதைக்கு அடிமையான நபர் ஒருவர் அச்சிறுமை கடைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தனியாக  அழைத்துச் சென்று வன்புணர்வு செய்து படுகொலை  செய்துள்ளமை  பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply