• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் போதைப்பொருளுக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்

இலங்கை

யாழ், மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களால்  நேற்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

“போதைப் பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது சந்ததியினரையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், யாழ் மாவட்ட சர்வமத பேரவை தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள், செயலாளர் அருட்பணி இ.ராஜ்குமார், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், மௌலவி வி.ஏ.எஸ்.சுபியான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
 

Leave a Reply