• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அஜீத்துக்காக பார்த்து பார்த்து சட்டையை வடிவமைத்த ஷாலினி… காதலிக்கே சஸ்பென்ஸ் வைத்த தல…!

சினிமா

தமிழ்த்திரை உலகில் ஸ்டைலான காதல் ஜோடி யார் யார் என்றால் சூர்யா, ஜோதிகா, அஜீத் ஷாலினி என ஒரு சிலரைத் தான் கூற முடியும். இவர்களில் தல அஜீத்தும், ஷாலினியும் காதல் திருமணம் செய்து கொண்டது சுவாரசியமான விஷயம். பார்க்கலாமா…

30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்திரை உலகில் நின்று பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர் அஜீத்குமார். 1999ல் அமர்க்களம் படத்தில் ஷாலினியுடன் இணைந்து நடித்தார். முதல் படத்திலேயே காதல். அடுத்த ஆண்டே திருமணம்.

2003ல் என்.மகாராஜன் இயக்கத்தில் வெளியான படம் ஆஞ்சநேயா. மீராஜாஸ்மின், ரகுவரன், சீதா உள்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்தன. இருந்தாலும் இந்தப் படத்தில் தல அஜீத்தின் நடிப்பு செம மாஸாக இருக்கும். இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் ஷாலினி. பலரும் அறியாத தகவல் இது.

இந்தப்படத்தில் அஜீத்துக்காக தனிப்பட்ட சட்டையை ஷாலினி வடிவமைத்திருந்தார். காதல் கணவருக்காக ஒரு சட்டையைப் பிரத்யேகமாகப் பார்த்து பார்த்து வடிவமைத்து இருந்தார். பாவாடை பஞ்சவர்ணம் என்ற பாடலில் அஜீத் இந்த சட்டையை அணிந்திருப்பார். மஞ்சள் சட்டையில் AK என்ற எழுத்துக்கள் இருக்கும்.

இது வலது கை இணையும் பகுதியில் இருக்கும். அது மட்டும் அல்லாமல் சட்டையின் பல இடங்களில் இந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இது அஜீத்குமாரின் ஆங்கில சுருக்கப்பெயர்.

அஜீத், ஷாலினி என்றாலே கோலிவுட்டில் ஸ்டைலான ஜோடி என்பது தெரிந்த விஷயம். இவர்களின் காதல் கதை விசித்திரமானது. அமர்க்களம் படத்தின்போது முதன் முதலில் ஷாலினியிடம் காதலைத் தெரிவித்தவர் அஜீத்.

தனது தந்தையிடம் இதுபற்றி தெரிவிக்குமாறு ஷாலினி கூறியுள்ளார். ஆனால் அஜீத் ஷாலினியிடம் தன் காதலைப் பற்றித் தெரிவிக்கும் முன்பே அவரது தந்தையிடம் இதுபற்றி பேசிவிட்டாராம். 24.4.2000 அன்று இந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர்.

தமிழச்சி கயல்விழி

Leave a Reply