• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பசிலை சந்தித்த சந்தோஷ் ஜா

இலங்கை

இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான பசில் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. சந்திப்பு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் முன்னேற்றங்கள் உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள தலைப்புகளில் சுமுகமான விவாதங்கள் தொடர்பிலும் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply