• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜேர்மனியில் சூடுபிடிக்கும் விவசாயிகள் போராட்டம்

ஜேர்மன் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளார்கள். கடந்த மாதம் 18ஆம் திகதி, ஜேர்மனியின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஜேர்மன் தலைநகர் பெர்லினில் ட்ராக்டர்களுடன் குவிந்தார்கள்.
  
அரசு, விவசாயத்துக்கான மற்றும் காடுகளில் மரம் வெட்ட பயன்படுத்தும் இயந்திரங்களை வாங்குவதற்காக அளித்துவந்த வரிச்சலுகைகள் மற்றும் டீசல் மானியத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதை எதிர்த்து அவர்கள் பெர்லினில் ஒன்று திரண்டார்கள். அதனால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இந்நிலையில், திங்கட்கிழமை முதல் மீண்டும் சாலைகளில் ஒன்றுதிரண்டுள்ளார்கள் விவசாயிகள்.

கடந்த மாத விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து, எரிபொருள் மானியம் முழுமையாக நிறுத்தப்படாது என்றும், ஆனாலும், படிப்படியாக அது குறைக்கப்படும் என்றும் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸின் செய்தித்தொடர்பாளரான Steffen Hebestreit தெரிவித்திருந்தார்.

ஆனால், மானியத்தைக் குறைக்கக்கூடாது என விவசாயிகள் கோரியுள்ளார்கள். அதற்காக மீண்டும் அவர்கள் பெர்லினில் மட்டுமின்றி, ஹாம்பர்க், கொலோன் மற்றும் Bremen ஆகிய நகரங்களிலும் ட்ராக்டர்கள், லொறிகளுடன் கூடியுள்ள நிலையில், இந்த போராட்டங்கள் வாரம் முழுவதும் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Leave a Reply