• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொருளாதார நெருக்கடி - கியூபாவில் எரிபொருள் விலை 500 சதவீதம் உயர்வு

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கியூபா - எரிபொருள் விலையை 500% உயர்த்தியுள்ளது.

மிக மோசமான பொருளாதார நெருக்கடியால், எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, பிப்ரவரி 1ம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

25 பேசோ (பைசா)வில் இருந்த விலை 132 பேசோவாக உயர்கிறது.

இது இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் ரூ.456க்கு விற்பனையாகும்.

Leave a Reply