• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடிய தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் அதிபர் திரு நடா ராஜ்குமார்

கனடா

East FM ஊடக குழுமத்தின் அதிபர், உங்கள் அன்புக்குரிய திரு நடா ராஜ்குமார் அவர்கள், இன்று, தமிழ்நாடு சென்னை பல்கலைக்கழகத்தில் கெளரவ உரையாற்றினார். 2000 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலையில் இடம்பெற்ற அவரது இரண்டு மணிநேர உரை, இலங்கையில், உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் ஈகமான தமிழ் உறவுகளுக்கான நினைவு பேருரையாகவும் அமைந்தது. உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயல் தலைவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கனடிய தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் இந்த சாதனைகளுக்காக,  அதிபர் திரு நடா ராஜ்குமார் அவர்களை வாழ்த்துவதில், East FM மகிழ்ச்சியடைகிறது.

Leave a Reply