• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காதல் கணவன் சகோதரன் ஆகிவிட்டார்! 2 குழந்தைகள் பெற்றெடுத்த பிறகு மனைவி கூறிய சுவாரஸ்ய கதை

தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் சகோதரன் முறையானது குறித்து, சமீபத்தில் லிண்ட்சே என்ற பெண் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் லிண்ட்சே என்ற பெண் சமூக வலைதளத்தில் தனது காதல் கதையை பகிர்ந்து கொண்டுள்ளார்,  அதில் தனது கணவர் கேட்டை கடந்த 2007ம் ஆண்டு சந்தித்ததாகவும், அப்போது இருவருக்கும் 14 மற்றும் 16 வயது இருந்தது என்று விவரிக்க தொடங்குகிறார்.

ஒருநாள் லிண்ட்சேவும் கேட்டும் ஒரே அறையில் இருப்பதை பார்த்த லிண்ட்சேவின் தாய், கேட்டின் தந்தையை சந்தித்து இருவருக்கும் இடையிலான உறவை பிரித்து வைத்துள்ளார்.

அதன் பிறகு இருவரும் சந்தித்து கொள்ளாத நிலையில், 6 வருடங்களுக்கு பிறகு பேஸ்புக் வழியாக கேட் ஒருநாள் லிண்ட்சேவுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

பின் மீண்டும் இருவரும் பழக தொடங்கியுள்ளனர், முதலில் இருவருக்கும் இடையிலான நட்பு பின் காதலாக மாறத் தொடங்கியுள்ளது. ஆனால் மீண்டும் அவர்களது பெற்றோர் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் லிண்ட்சேவிற்கு விமானப்படையில் வேலை கிடைத்து கேட்டை விட்டு தூரமாக சென்றுள்ளார். அதே நேரத்தில் கேட்டின் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டு 1 வருடம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நேரத்தில் இருவருக்கும் இடையிலான காதல் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, கேட் சிறையில் இருந்து வெளியே வந்ததும் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

தற்போது லிண்ட்சேவிற்கும், கேட்டிற்கும் 2 குழந்தைகள் உள்ளனர், இந்த இடைப்பட்ட காலத்தில் லிண்ட்சேவையும் கேட்டையும் பிரிப்பதற்காக முயற்சி செய்த பெற்றோர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பெற்றோர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதால் கேட் தனக்கு சகோதரன் முறை வருவார். இதனால் உறவு முறையில் குழப்பம் இருப்பினும், எங்களை அது பாதிக்கவில்லை, நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply