• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நுவரெலியாவில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம்

இலங்கை

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் (12) தொடர்ந்துள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்திலும் தபால் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

நுவரெலியா தபால் நிலையம் உட்பட தபால் திணைக்களத்துக்கு சொந்தமான கட்டிடங்களைத் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நிறுவனங்களுக்கு விற்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊழியர்களுக்கு 20,000ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில் 2 ஆவது நாளாகவும் குறித்த போராட்டம் தொடர்வதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply