• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மஸ்கெலியாவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தைப்புலி மீட்பு

இலங்கை

மஸ்கெலியா – பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் இன்று (29) காலை உயிரிழந்த நிலையில் 6 அடி நீளமான ஆண் சிறுத்தைப்புலி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேட்டைப் பொறியில் சிக்கி உயிரிழந்த நிலையிலேயே குறித்த சிறுத்தைப் புலி மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில்  சில மாதங்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாகவும், குறிப்பாக லயன் குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தைப் புலிகள் வருவதாகவும், அங்கு  காவலுக்காக வளர்க்கப்படுகின்ற நாய்களை வேட்டையாடி உண்ணுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply