• Welcome to TamilsGuide
செய்திகள் 1

115 ஆண்டுகளுக்கு முன் மாயமான சாபக் கப்பல்.. உடைந்த பக்கங்கள் கண்டுபிடிப்பு 

115 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சபிக்கப்பட்ட கப்பலின் உடைந்த பக்கங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் மூழ்கிய பல கப்பல்கள் பற்றிய உண்மைகளும் செய்திகளும் வெளிவந்திருக்கிறது. விபத்துக்குள்ளான கப்பல்கள் மூழ்கியதால் பாரிய உயிர்ச் சேதமும், உடமைச் சேதமும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், இந்த கப்பலுக்குனு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த கப்பல் 115 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் பயணித்தபோது திடீரென காணாமல் போனது. எங்கே போனது என்று யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு கப்பல் இருந்த இடம் தெரிய வந்துள்ள நிலையில் அதிர்ச்சிகரமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா அருகே கப்பல் மாயமானது. ஆனால் இந்த கப்பல் சபிக்கப்பட்ட கப்பல் என்று அழைக்கப்படுகிறது. அதற்கான காரணத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.

அடெல்லா ஷோர்ஸ் (Adella Shores) என்ற இந்தக் கப்பல் 1894-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஜிப்ரால்டரில் ஷோர்ஸ் லம்பர் என்பவரால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.

கப்பலைக் கட்டிய நிறுவனத்தின் உரிமையாளரின் மகளின் நினைவாக இந்த கப்பலுக்கு பெயரிடப்பட்டது. இது நீராவியால் இயங்கும் 735 டன் மரக் கப்பல்.

கப்பல் புறப்படும் போது அதில் 14 பேர் இருந்தனர். 195 அடி நீளமுள்ள இந்தக் கப்பல் 15 ஆண்டுகளில் இரண்டு முறை மூழ்கியது. அந்த நேரத்தில் மாலுமிகள் இந்த கப்பலை சபிக்கப்பட்டவர்கள் என்று அழைத்தனர். ஏனெனில்..

ஏப்ரல் 29, 1909 அன்று, கப்பல் மினசோட்டாவுக்குப் புறப்பட்டது. அந்த நேரத்தில் உப்பு ஏற்றப்பட்டு வருகிறது.

ஆனால், மே 1, 1909 அன்று, கப்பல் திடீரென காணாமல் போனது. மிச்சிகனில் உள்ள வைட்ஃபிஷ் பாயிண்டில் இருந்து கப்பல் காணாமல் போனது.

2021-ஆம் ஆண்டில், ஆராய்ச்சியாளர்கள் 115 ஆண்டுகளுக்குப் பிறகு கடலுக்கு 650 அடி ஆழத்தில் கப்பலைக் கண்டுபிடித்தனர். 

1894-இல் கட்டப்பட்ட 15 ஆண்டுகளில் இரண்டு முறை கப்பல் மூழ்கியது. இது கடைசியாக பார்த்த இடத்திலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட்டது. கிரேட் லேக்ஸ் ஷிப்ரெக் ஹிஸ்டாரிகல் சொசைட்டி மூலம் கப்பல் விபத்து அடையாளம் காணப்பட்டது.

புதிய கப்பல் கட்டும்போது அதன் மேல் மது பாட்டிலை உடைக்கும் வழக்கம் உள்ளது. ஆனால், கப்பல் கட்டும் நிறுவன உரிமையாளர், அவரது குடும்பத்தினர் மது அருந்துவதில்லை. இதனால் கப்பலில் இருந்த மது பாட்டிலுக்கு பதிலாக தண்ணீர் பாட்டிலை உடைத்தனர். இந்த காரணத்திற்காக கப்பல் சபிக்கப்பட்டதாக மக்கள் நம்பினர். 
 

Leave a Reply