• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் மின்சாரம் தாக்கி 26 வயது இளைஞன் உயிரிழப்பு

இலங்கை

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் அலுவகத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய கஜந்தன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவகத்தில் பணியில் இருந்த வேளை மின்சாரம் தாக்கியதாகவும் பின்னர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply