• Welcome to TamilsGuide
செய்திகள் 1

60 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் கண்டுபிடிப்பு

இலங்கை

கனடாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் இருந்து ஒரு தொகை குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 25ஆம் திகதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்தக் கொள்கலன் மீது சந்தேகத்தின் பேரில் சுங்க வருவாய் கண்காணிப்புப் பிரிவினர் இதனைக் கைப்பற்றியிருந்தனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அங்கு 6 கிலோ குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பங்குகளின் பெறுமதி சுமார் 60 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த போதைப்பொருள் கனடாவில் இருந்து கணேமுல்ல பிரதேசத்திலுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், இந்த பொதியின் உரிமையாளர் சார்பாக வந்த முகவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

Leave a Reply