• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம்

இலங்கை

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

நாடாளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க அறிவித்துள்ளார்.

பொறுத்தது போதும் எனும் தொனிப்பொருளில் இவர்கள் பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

நாடாளாவிய ரீதியில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களது கோரிக்கை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் உரிய கவனம் செலுத்தப்படாவிடின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கிராம உத்தியோகத்தர்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply