• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர், லெபனால் சிறையில் அடைப்பு

இலங்கை

யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்த நபரொருவர் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு லெபனான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே  இவ்வாறு  முகவர் ஒருவரை நம்பி, பிரான்ஸ் செல்வதற்காகப்  பெருந்தொகைப்  பணத்தைக்  கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அம்முகவர், குறித்த நபரை பல்வேறு நாடுகளுக்கு அழைத்து சென்று இறுதியாக லெபனான் நாட்டின் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட நிலையில்,  அவர் கைது செய்யப்பட்டு லெபனான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லெபனான் சிறையில் உள்ள தனது கணவரை  மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர உதவி செய்யுமாறு  அவரது மனைவி பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply