• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் – இந்தோனேஷிய ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுவிற்கும் பீஜிங்கில் கலந்துரையாடல் ஒன்று இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இதன்போது அரசியல், கலாசார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று பெய்ஜிங் சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply