• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் பரபரப்பு - இரு நண்பிகள் தூக்கிட்டுத் தற்கொலை

இலங்கை

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் நேற்றைய தினம் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும், இதன்போது ‘எங்களது மரணத்திற்கு  யாரும் காரணமில்லை. இது நாங்கள் எடுத்த முடிவு. எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை’ என கடிதமொன்றை எழுதிவைத்துவிட்டு அவர்கள் உயிரை மாய்த்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சையில் தோற்றி பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply