• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலக நாடுகளிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்த அதிபர் ஜோ பைடன்

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உலக நாடுகள் உக்ரைனுக்கு பக்கபலமாக நிற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே அதிபர் ஜோ பைடன் இதனை கூறியுள்ளார்.
  
மோதலின் போது மனிதாபிமான உதவிகளை ஒழுங்கமைப்பதில் ஐ.நா தலைமை வகித்தாலும், அது போரில் மத்தியஸ்தராக செயல்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இப்போது நாம் எடுக்கும் முடிவுகள் பல தசாப்தங்களாக நமது எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறதாகவும் ஜனாதிபதி ஜோ பைடன் மேலும் தெரிவித்தார். 
 

Leave a Reply