• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லொத்தர் சீட்டு மோசடியில் ஈடுபட்ட கனேடியர்

கனடா

கனடாவில் லொத்தர் சீட்டு மோசடியில் ஈடுபட்ட பிரம்டனைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாடு தழுவிய ரீதியில் இந்த நபர் லொத்தர் சீட்டு மோசடிகளில் ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. 60 வயதான கிளைவ் லோத்தியான் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
  
மில்லியன் கணக்கான லொத்தர் சீட்டு பண பரிசு கிடைக்க பெற்றுள்ளதாக கூறி, அதற்கான வரியை செலுத்துமாறு அவர்களிடமிருந்து பணம் அபசரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மோசடிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கு எதிராக போலீசார் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்த சந்தேக நபரிடம் எவரேனும் பணத்தை பறி கொடுத்திருந்தால் அது குறித்து அறிவிக்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply