• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கைகளின் பரிந்துரைகளை நிறைவேற்ற நீதி அமைச்சு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கைகளும் ஜனாதிபதி தெரிவுக்குழுவின் அறிக்கைகளும் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழுக்களின் அறிக்கைகளின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால் மாத்திரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நீதி கிடைக்கும் எனவும் எதிர்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில்;, நீதி அமைச்சரும், அரசாங்கமும், இந்த அறிக்கைகளின் பரிந்துரைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் வலியுறுத்தியுள்ளார்.
 

Leave a Reply