• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் 9ஆவது உலர் வலய விவசாயத்தின் சர்வதேச மாநாடு

இலங்கை

“நவீன உலகத்தில் உணவு நெருக்கடியைத்தவிர்த்தல் “என்ற தொணிப்பொருளில் 9வது உலர் வலய விவசாயம் தொடர்பான சர்வதேச மாநாடு யாழ்  பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றது.

இம்மாநாடானது யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி எஸ்.வசந்தரூபா தலைமையில் விவசாய பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் விருந்தினராக யாழ் பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். கண்ணதாசன், விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் மாலதி பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், விவசாய திணைக்களங்களின் உயரதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள் எனப்  பலரும் இந்நிகழ்வில்  கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a Reply