• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு விசேட குழு - சுரேன் ராகவன்

இலங்கை

பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பதற்கு விசேட குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடமக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பல்கலைக்கழகங்களின் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த கலாசாரத்தை நாம் நிறுத்தியே ஆகவேண்டும். பல்கலைக்கழகங்களில் இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களினாலேயே இந்த பகிடிவதை அறங்கேற்றப்படுகிறது.

இதனால் மாணவர்கள் உடல்- உள ரீதியான கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

கடந்த 12 மாதங்களில் மட்டும் 17 பல்கலைக்கழகங்களில் 36 பகிடிவதைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

57 பேருக்கு வகுப்புத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது. சுயாதீன விசாரணைக்குப் பின்னரே இவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வகுப்புத்தடை செய்யப்பட்ட மாணவர்கள், தங்களின் குற்றங்களுக்கு மன்னிப்புக் கோரினால் அவர்களுக்கான தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply