• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பில் வலுவடைந்து வரும் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம்

இலங்கை

மட்டக்களப்பில் மயிலத்தமடுமற்றும் மாதவனை பகுதியைச் சேர்ந்த கால்நடை பண்ணையாளர்கள் கடந்த 5 நாட்களாக பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்களுக்குச் சொந்தமான மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தருமாறு கோரியே பண்ணையாளர்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ”கடந்த ஐந்து நாட்களாக வாழ்வாதாரத்தை இழந்து நாம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். எனினும் எமது போராட்டம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் பிரதேச செயலாளர்களும் அக்கரையற்ற நிலையிலேயே உள்ளனர்” என கவலை தெரிவித்திருந்தனர்.
 

Leave a Reply