முன்னாள் காதலிக்கு 860 கோடி சொத்து எழுதிய எப்ஸ்டீன்
ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தனது முன்னாள் காதலியாக கூறப்படும் பல் மருத்துவர் கரீனா ஷூலியாக் என்பவருக்கு 860 கோடி சொத்து எழுதி வைத்துள்ளமை தற்போது பெசுபொருளாகியுள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க சிறையில் இருந்த போது ஜெஃப்ரி எப்ஸ்டீன் மர்மமான முறையில் இறந்து போனார்.
அவரது இறப்பின் பின் பல்வேறு உலகை உலுக்கும் பல்வேரு தகவல் வெளியாகி இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் இந்த விவகாரம் அமெரிக்காவில் மட்டுமல்லாது பல நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதற்கு காரணம், அமெரிக்காவில் உள்ள பெரும் பணக்காரர்களை தன் வலைக்குள் கொண்டு வந்து கடலுக்கு நடுவில் ஒரு தனித்தீவை உருவாக்கி அங்கு உல்லாச விடுதிகளை கட்டி அங்கு சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை கொண்டு வந்து பணக்காரர்களுடன் உல்லாசமாக இருக்க வைத்து அது தொடர்பான வழக்கில் சிக்கியவர்தான் இந்த எப்ஸ்டீன் (Jeffrey Epstein).
Epstein தொடர்பான ஆவணங்கள் Epstein Files என்கிற பெயரில் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வந்தது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆகியோர்களின் பெயர்கள் அடிபட்டதோடு, அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியானது.
ஆனால், எப்ஸ்டீனூடன் நட்பாக பழகியதாக மட்டுமே அவர்கள் சொன்னர்கல்.
இந்நிலையில்தான் அமெரிக்க பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் உயில் தொடர்பான புதிய ஆவணங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் அவர் முன்னாள் காதலியாக கூறப்படும் பல் மருத்துவர் கரீனா ஷூலியாக் என்பவருக்கு சுமார் ரூ.860 கோடி மதிப்பிலான சொத்தும், 33 காரட் வைர மோதிரமும் கிடைக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.






















