யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலையம் ஆரம்பம்
இலங்கை
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலையமானது யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (30) திறந்து வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நாக விகாரையின் விகாராதிபதி தலைமையில் வெசாக் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரிஜந்த நவரத்ன, 51 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரிஸ்வி ராசிக், யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், கிளிநொச்சி மாவட்ட செயலர் சுப்பிரமணியம் முரளிதரன், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் உமாகாந்தன் சிவகாமி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் சர்வமத தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெசாக் தினமான நேற்று புத்தரின் பிறப்பு, இறப்பு, பரிநிர்வானம் அடைந்த வைகாசி பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, அவரின் வாழ்க்கை தத்துவங்கள் அடங்கிய ஒளியூட்டப்பட்ட அலங்காரங்கள் வெசாக் வலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும் பெளத்த பக்தி கீதங்களும் இசைக்கப்பட்டன.
மேலும் வெசாக் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு உனவுகள் மற்றும் சிற்றுண்டிகளும் வழங்கிவைக்கப்பட்டது.






















