யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – உதவிய உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக விசாரணை
இலங்கை
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான காணியை வெளிப்படுத்தல் உறுதி முடித்து மோசடி செய்ய உதவிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நகரில், புதிதாக அமையப்பெற்று வரும் மாநகர சபை கட்டடத்திற்கு அருகில் உள்ள யாழ். மாநகர சபைக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பெறுமதிமிக்க ஆதனமொன்று, வெளிப்படுத்தல் உறுதி மூலம் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு, வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானத்தால், முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.






















