• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா இடைத்தேர்தல்களில் பிரதமர் கட்சி வெற்றி பெறவேண்டும் - மக்கள் விருப்பம்

கனடா

கனடாவில் இன்று மூன்று நாடாளுமன்ற இருக்கைகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன.

அந்த தேர்தல்களில், ஆளும் மார்க் கார்னியில் லிபரல் கட்சி பெற்றி பெறவேண்டும் என 50 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் விரும்புவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.

கனடாவின் ரொரன்றோவில் இரண்டு தொகுதிகளிலும், மொன்றியலில் ஒரு தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. 

விடயம் என்னெவென்றால், இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். அதாவது, கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக இருக்கவேண்டுமானால், அக்கட்சிக்கு 172 இருக்கைகள் இருக்கவேண்டும்.

மார்க் கார்னியின் லிபரல் கட்சியிடம் இப்போது 171 இருக்கைகள் உள்ளன. ஆக, தற்போது தேர்தல் நடைபெறும் மூன்று இடங்களில், ஒரே ஒரு இடத்தில் லிபரல் கட்சி வெற்றி பெற்றால் கூட, அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துவிடும்.

இரண்டு இடங்களிலோ அல்லது மூன்று இடங்களிலுமோ வெற்றி கிடைத்தால், லிபரல் கட்சிக்கு அது மிகப்பெரிய பலமாகிவிடும்.

அதாவது, ஏதாவது ஒரு வாக்கெடுப்பில் இரண்டு பிரிவினரும் ஒரே அளவில் வாக்களித்தால், ஆளும் கட்சி கூடுதல் ஒரு வாக்குக்காக, சபாநாயகரின் உதவியை நாடவேண்டியிருக்கும். இன்றைய தேர்தலில் அக்கட்சிக்கு 173 அல்லது 174 இருக்கைகள் கிடைத்துவிட்டால், யாருடைய உதவியையும் நாடாமலே மசோதாக்களை நிறைவேற்ற முடியும்.

அதனால்தான், இந்த இடைத்தேர்தல் கனடா அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இதற்கிடையில், பிரதமர் மார்க் கார்னினியின் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவேண்டும் என பொதுமக்களும் கருதுவது வாக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

Ipsos அமைப்பு மேற்கொண்ட வாக்கெடுப்பில், 53 சதவிகித கனேடிய மக்கள் பிரதமர் மார்க் கார்னினியின் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவேண்டும் என வாக்களித்துள்ளார்கள்.

47 சதவிகித மக்கள் மட்டுமே இக்கருத்துக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.

ஆக, மக்கள் விருப்பமும் பிரதமர் கட்சி பெரும்பான்மை பெறவேண்டும் என்பதாகத்தான் உள்ளது. தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதை விரைவில் பார்க்கலாம். 

Leave a Reply