ஈரானில் போர் அவலம் - இருநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் உயிரிழப்பு
மோதல் ஆரம்பித்த நாள் முதல் இதுவரை ஈரானில் 243 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் பெரும்பாலானவர்கள் பாடசாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.























