• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சுப்பிரமணியம் ராஜேந்திரம்

தோற்றம் 04 FEB 1945 / மறைவு 22 APR 2024

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ராஜேந்திரம் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கரத்தினம்(லண்டன்) தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் சுந்தரேஸ்வரி(மல்லாகம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரேமாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுஜீவன்(லண்டன்), சுஜந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வைடுரீகா(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,

ராஜேஸ்வரி, ராஜநாயகி, ராஜினி, ராஜிதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உஷாதேவி, செளமியாதேவி, சதானந்தன், Dr. சண்முகானந்தன் ஆகியோரின் மைத்துனரும்,

ஜெகதீசன், காலஞ்சென்றவர்களான திருவாதவூரன், செந்தில்நாதன் மற்றும் கிருபாளினி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற நாகராஜா, விஸ்வலிங்கம், ஞானகெளரி, கல்யாணி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 24-04-2024 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பொறளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொறளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
பிரேமாதேவி - மனைவி

    Mobile : +94775855777

சுஜீவன் - மகன்

    Mobile : +447814841440

சுஜந்தன் - மகன்

    Mobile : +16472872362

Leave a Reply