• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் 111பரீட்சை நிலையங்களில் சாதாரண தர பரீட்சை ஆரம்பம்

இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை ஆரம்பமாகியுள்ளது

அதன்படி மட்டக்களப்பு,பட்டிருப்பு,மட்டக்களப்பு மேற்கு,கல்குடா,மட்டக்களப்பு மத்தி ஆகிய வலயங்களில் இன்றைய தினம் இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை ஆரம்பமானது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 111 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 13902 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்குகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பாடசாலை பரீட்சார்த்திகளாக 10037பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 3865பேரும் தோற்றுவதுடன் இதில் தமிழ் மொழியில் 13826 சிங்கள மொழியில் 10பேரும் ஆங்கில மொழியில் 66பேரும் தோற்றுகின்றனர்

மேலும் இன்றைய தினம் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து பெற்றோரின் ஆசிர்வாதகங்களைப்பெற்று பரீட்சை நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply