• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் தீ விபத்தில் முதியவர் உயிரிழப்பு! 

இலங்கை

யாழில்   தீ விபத்தில் சிக்கி முதியவரொருவர்  நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர் தனது மகளது வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில் நேற்றைய தினம் வீட்டில் யாரும் அற்றவேளை  பீடியைப்  பற்ற வைக்க முயன்றுள்ளார் எனவும் இதன்போது  எதிர்பாராத விதமாக படுக்கையில் தீப்பற்றி எரிந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காப்பாற்ற யாரும் அற்ற நிலையில் முதியவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார் என ஆரம்பக் கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply