• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொலிஸ் – தனியார்துறையினரின் சிசிரிவி கமராக்கள் இணைப்பு

இலங்கை

பொலிஸ் சிசிடிவி கமரா அமைப்புடன் பொது மற்றும் தனியார் துறைக்கு சொந்தமான கமரா அமைப்புகளை இணைத்து குற்றங்களை கண்டறியும் பாதுகாப்பு கமெரா அமைப்பை விரிவுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி முதற்கட்டமாக கொழும்பு நகரின் தனியார் பிரிவில் இரண்டாயிரம் கேமராக்கள் சிசிடிவி. அமைப்பில் இணைந்து கொள்ள விரும்புபவர்களுடன் கலந்தாலோசித்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.

இந்த சிசிடிவி வரம்பை விஸ்தரிப்பதுடன், இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள சிசிடிவி அமைப்புகளுடன் பொலிஸ் கமெரா அமைப்பு இணைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் கொழும்பில் உள்ள வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சி.சி.டி.வி. நூறாயிரக்கணக்கான கேமராக்கள் இருந்தாலும், நாட்டில் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் அவற்றின் பங்களிப்பு மிகக் குறைவு என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த முறமையை தென் கொரியா, இந்தியா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் பிற நாடுகளும் பாதுகாப்பு கேமரா அமைப்புகளைப் பயன்படுத்தி பின்பற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply