• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கம்பளையில் கிணற்றுக்குள் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

இலங்கை

கம்பளை நகரின் அம்பகமுவ வீதியிலுள்ள பழைய பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.

கொழும்பு ஜாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுது்து வருகின்றனர்.

குறித்த பாதுகாப்பற்ற கிணற்றில் ஏற்கனவே இரு மரணங்கள் சம்பவித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply