வட மாகாண ஆளுநரின் வாகனத் தொடரணி விபத்து
இலங்கை
வடமாகாண ஆளுநரின் வாகன தொடரணி, யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – கண்டி நெடுச்சாலையில் வாகன தொடரணி பயணித்துக்கொண்டிருந்த வேளை , மீசாலை பகுதியில் பாதசாரி கடவை ஒன்றில் முன்னால் பயணித்த வாகனம் திடீரென வேகத்தை குறைத்தமையால், பின்னால் சென்ற மூன்று வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் வாகனத்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில் வாகனங்கள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.