• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் நகருக்கான விசேட பேருந்து சேவை ஆரம்பம்

இலங்கை

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு வயாவிளான் பகுதியில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து  சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தலைமையில் இன்று உத்தியோகப்பூர்வமாகக் குறித்த பேருந்து சேவை  ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி வலிகாமம் வடக்கு வயாவிளான் திக்கம்புரை டெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து  சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து சேவையானது வயாவிளான் சுதந்திரபுரம் ஊடாக வயாவிளான் மத்திய கல்லுரி ஈழகேசரி பொன்னையா வீதி ஊடாக குரும்பசிட்டி கட்டுவனக் சந்தி ஊடாக தெல்லிப்பழை வைத்தியசாலையை சென்றடைந்து கே கே எஸ் வீதி ஊடாக யாழ் நகரை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்தொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா அண்மையில் வயாவிளான் பகுதிக்கு சென்றிருந்த போது அப்பகுதியில் காணப்படும் போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்பில் அம்மக்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply