• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு

இலங்கை

சுவிஸ்ஸில் வசிக்கும் யாழைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மீது பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனது கணவரைப் பிரிந்து பிள்ளைகளுடன்  வாழ்ந்து வந்த பெண்ணே இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.

குறித்த பெண் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, தனது  பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில்  முறைப்பாடு அளிப்பதற்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார் எனவும்,  இதன்போது அங்கிருந்த  தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அது நாளடைவில் காதலாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம் , நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார் எனவும், நாளடைவில்  பொலிஸ் உத்தியோகஸ்தர் அப் பெண்ணை ஏமாற்ற தொடங்கியுள்ளார் எனவும் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply