• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எந்தவொரு நாடும் இவ்வளவு சுலபமாக மீண்டெழுந்ததில்லை

இலங்கை

பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த எந்தவொரு நாடும் இவ்வளவு சுலபமாக மீண்டெழுந்த வரலாறு உலகில் வேறு எங்கும் நிகழ்ந்ததில்லை என  ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவிடம் சிறந்த பொருளாதார முகாமைத்துவம் காணப்படுகின்றது.  2022 ஆம் ஆண்டில் பண்டிகை கொண்டாட்டம் என்பது இந்த நாட்டில் கேள்விக்குறியாக காணப்பட்டது.

ஆனால் அந்த நிலைமையை மாற்றி நாட்டுமக்கள் மகிழ்ச்சியாக புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் நிலையை ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க ஏற்படுத்தி கொடுத்துள்ளார்” இவ்வாறு பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply