• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புத்தாண்டுத் தினத்தில் யாழில் வாகன விபத்து - மூவர் காயம்

இலங்கை

புத்தாண்டு தினத்தில் யாழ், சாவகச்சேரி கச்சாய் வீதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.

சாவகச்சேரிப் பகுதியில் இருந்து தனது இரண்டு பேரக் குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்த நபர் மகிழங்கேணிப் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேளையில், பின்பக்கமாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் இரு குழந்தைகள் மற்றும் வேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த நபர் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான  மேலதிக விசாரணைகளை  சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply