மின்னேரியாவில் துப்பாக்கிச் சூடு - யுவதி காயம்
இலங்கை
மின்னேரியாவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், யுவதியொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்னேரியா, கிரித்தலே பகுதியிலேயே நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 17 வயதுடைய யுவதி ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.