• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய தொலைநோக்கு பார்வையுடன் புதிய தேசத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து பணியாற்றுவோம் - ஜனாதிபதி வாழ்த்து

இலங்கை

புதிய தொலைநோக்கு பார்வையுடன் புதிய தேசத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து பணியாற்றும் அனைவருக்கும், ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக இந்த புத்தாண்டு அமையவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

புதிய ஆண்டில் ‘ஒரு நாடு’ என்ற வகையில் சரியான வழியில் முன்னேறுவதற்கு சமூக உறவுகளும் ஒற்றுமையுமே அடிப்படைக் காரணிகள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

புதுப்பித்தல் என்பது வாழ்க்கையில் புதிய நம்பிக்கை தருகின்ற ஒரு அடிப்படைக்காரணியென தெரிவித்துள்ள ஜனாதிபதி, இதன்மூலமே எமது நாடு உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் முன்னேற்றமடைய முடியும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ், சிங்களப் புத்தாண்டினை, உறவுகளையும் ஒற்றுமையையும் அடிப்படையாகக் கொண்டே புதுப்பித்துக்கொள்வதாக ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply