• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குரோதி என்ற நாமத்தோடு பிறந்துள்ள புதுவருடம் - நல்லூரானின் தரிசனம்

இலங்கை

குரோதி என்ற நாமத்துடன் பிறந்துள்ள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று காலை இடம்பெற்றிருந்தன.

சந்த மண்டபத்தில் இன்று காலை விசேட பூஜைகளை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலா வந்து அடியவர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

சித்திரை புத்தாண்டு ‘குரோதி’ என்ற நாமத்துடன் நேற்றிரவு 8.15 மணிக்கு வாக்கிய பஞசாங்கத்தின் அடிப்படையிலும்
திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 9.04 மணிக்கும் பிறந்துள்ளது.

இந்த புத்தாண்டில் உலகெங்கும் வாழுகின்ற அணைத்து தமிழ் மக்களுக்கும் நல்லூர் கந்தனின் அருளும் நல்லாசியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆதவன் தொலைக்காட்சி குடும்பமும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கி;னறது.
 

Leave a Reply