போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற இலங்கையர் கைது
இலங்கை
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இவர் இன்று அதிகாலை மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கிச் செல்லவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.