• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புத்தாண்டுக்கான சுபவேளைப்பத்திரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை

சிங்களம் மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான நல்லிணக்க சுபவேளைப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

பாரம்பரிய முறைப்படி இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச அனுசரணை குழுவினால் தயாரிக்கப்பட்ட புண்ணியகால சுப நேர பத்திரம் ஜனாதிபதியிடம் இவ்வாறு கையளிக்கப்பட்டது.

புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவும் இதில் கலந்து கொண்டார்.

புத்தாண்டு பிறப்பது, புண்ணிய காலம், சமைத்தல், அடுப்பு பற்றவைத்தல், உணவு உண்பது, தலைக்கு எண்ணெய் வைப்பது புத்தாண்டில் வேலைக்குப் புறப்படுவது போன்ற சுப காரியங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க,
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply