• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அநீதிகளுக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டும் - சம்பிக்க அழைப்பு

இலங்கை

உள்ளுர் சந்தைகளில் இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக பாரிய போராட்டங்களை நடத்த மக்கள் அணி திரள வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலத்தில் எண்ணெய், எரிவாயு, மின்சாரம் இல்லாத போது மக்கள் தங்கள் உரிமைகளுக்காக எழுந்து நின்றார்கள்.

ஆனால் உள்ளுர் சந்தைகளில் இடம்பெறுகின்ற அநீதிக்கு எதிராக இதுவரை அத்தகைய நடவடிக்கையை மக்கள் எடுக்கவில்லை.

எனவே, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக மக்கள் எழுந்து நிற்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

எனது முகநூல் கணக்கின் ஊடாக திங்கட்கிழமைதோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மக்களுக்கு அறிவிக்கப்படும்.

இறக்குமதி விலை, மொத்த விலை மற்றும் சில்லறை விலையை தெரிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அந்தவகையில் பொருட்களின் விலையை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

பல்வேறு அமைப்புகளும் இந்த விடயத்தில் தலையிட வேண்டும்.

முகப்புத்தகத்தில் காட்சிப்படுதலுடன், நாட்டு மக்கள் அனைவரும் அறியும் வகையில் விலை அறிவிப்பு முறையை அறிவிக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தொரிவித்துள்ளார்.
 

Leave a Reply