• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் நிர்வாணமான நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

இலங்கை

யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் நிர்வாணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சாந்தினி எனும் 63 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிள்ளைகள் மற்றும் கணவரை பிரிந்து தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வீட்டில் சடலமாக காணப்பட்டதை அயலவர்கள் கண்ணுற்று பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
 

Leave a Reply