• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்கக் கோரி போராட்டம்

இலங்கை

அத்தியாவசியப் பொருட்களின் விலையைக்  குறைக்குமாறு கோரி  கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில்  ஏராளமானோர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர்.

இதன்போது   அரிசியின் விலையை 100 ரூபாயாகக் குறைக்குமாறும்,  மனித உயிர்களைக் காவு வாங்காமல்  அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
 

Leave a Reply